நீலகிரி : கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு உதகையில் சான்டா கிளாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா ஊர்வலம் நடைபெற்றது.
நீலகிரி : கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு உதகையில் சான்டா கிளாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா ஊர்வலம் நடைபெற்றது.

வரும் 25-ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் இரவு நேரங்களில் சான்டா கிளாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து, கேரல்ஸ் பாடல்களைப் பாடி இயேசு பிறந்த நாளின் சிறப்புகளை எடுத்துரைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், உதகையில் உள்ள அனைத்து கிறிஸ்துவ சபைகளும் ஒருங்கிணைந்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னோட்டமாக சான்டா கிளாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா பவனி நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது. உதகை மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தொடங்கி வைத்த இந்த ஊர்வலம், தாமஸ் ஆலயத்தில் தொடங்கி, மத்திய பேருந்து நிலையம், மணிக்கூண்டு, கமர்சியல் சாலை நகரின் முக்கிய வழியாக தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் நிறைவடைந்தது. இதில், ஏராளமான கிறிஸ்துவர்கள் துதி பாடல்களை பாடி ஊர்வலமாக வந்தனர். கடுங்குளிர் நிலவிய போதும் ஏராளமான மக்கள் சாலையில் இருபுறமிருந்து கிறிஸ்மஸ் தாத்தா பவனி வருவதைக் கண்டுகளித்தனர்.