தாராபுரத்தில் ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் : 3 கடைகளுக்கு சீல்

திருப்பூர் : தாராபுரம் அருகே ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள 255 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், 3 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

திருப்பூர் : தாராபுரம் அருகே ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள 255 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், 3 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். 



தாராபுரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடைகளில் வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் தாராபுரத்தில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, தாரபுரம் என்.என். பேட்டை வீதியில் உள்ள போசாராம் என்பவரின் மொத்த வியாபார மளிகைக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினா். 



அதனைத் தொடர்ந்து, அவரது சகோதரர் ஆசாராம் கடையிலும் மற்றும் தினசரி மார்க்கெட்டில் உள்ள செல்வம் என்பவரது கடையிலும் நடத்திய சோதனையில் மொத்தம் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, முறைகேடாக குட்கா பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து, கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். 

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...