மின்கோபுரங்களை விவசாய நிலங்களில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கோவை : விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மின்கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்கக் கோரியும் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை : விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மின்கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்கக் கோரியும் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் மின் தொடரமைப்பு கழகமும், விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அனுமதியின்றி பவர்கிரிட் நிறுவன ஊழியர்கள் நில அளவை செய்ய வந்த போது, உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் போராடி தடுத்தனர்.



இந்த நிலையில், விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்ல உள்ள மின்கோபுரங்களை சாலை வழியாகக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், மின்கோபுரங்கள் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், வருடாந்திர வாடகை வழங்கக் கோரியும் இன்று 13 மாவட்டங்களில் இருக்கும் 8 மையங்களில் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இது குறித்து கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை மையத்தில் போராடி வரும் ஏர்முனை இளைஞர் அணியைச் சார்ந்த சுரேஷ் கூறுகையில், "இந்த காத்திருப்பு போராட்டமானது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக நடைபெற்று வருகிறது. எங்களது போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்," என்றார்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...