இந்திய எல்லைப் பகுதிகளில் பறக்கும் விமானங்களில் விமானங்களில் இணைய சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என விமான போக்குவரத்து செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லைப் பகுதிகளில் பறக்கும் விமானங்களில் விமானங்களில் இணைய சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என விமான போக்குவரத்து செயலாளர் தெரிவித்துள்ளார்.
தரையில் இருக்கும் அதிவேக இணைய வசதி விமானங்களில் இருப்பதில்லை. செல்போன் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதனைப் போக்கும் விதமாக இந்திய எல்லைப் பகுதிகளில் பறக்கும் விமானங்களில் இணையதள தொடர்பு வசதிகள் தொடங்கப்பட உள்ளது.
அதற்கு அனுமதியளிக்கும் கோரிக்கைக்கு தொலைத்தொடர்புத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. நீண்ட நாட்களாக பயணிகளின் எதிர்பார்ப்பாக இருந்த இந்த வசதி தற்போது நடைமுறைக்கு வர உள்ளது. விமான போக்குவரத்து செயலாளர் ஆர்.என்.சவ்பே இந்த முக்கிய தகவலை வெளியிட்டு விமான பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த வசதியை ஒப்பந்தம் மூலமாக ஏர்டெல், ஜியோ போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்று வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னரே லுப்ட்ஹன்சா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கதார் ஏர்வேஸ், எமிரேட்ஸ் போன்ற வெளிநாட்டு விமானங்களில் இந்த வசதி இருந்தாலும் அந்த விமானங்களுக்கு இந்திய விமான எல்லையில் இணைய தொடர்பு கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தரையில் இருக்கும் அதிவேக இணைய வசதி விமானங்களில் இருப்பதில்லை. செல்போன் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதனைப் போக்கும் விதமாக இந்திய எல்லைப் பகுதிகளில் பறக்கும் விமானங்களில் இணையதள தொடர்பு வசதிகள் தொடங்கப்பட உள்ளது.
அதற்கு அனுமதியளிக்கும் கோரிக்கைக்கு தொலைத்தொடர்புத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. நீண்ட நாட்களாக பயணிகளின் எதிர்பார்ப்பாக இருந்த இந்த வசதி தற்போது நடைமுறைக்கு வர உள்ளது. விமான போக்குவரத்து செயலாளர் ஆர்.என்.சவ்பே இந்த முக்கிய தகவலை வெளியிட்டு விமான பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த வசதியை ஒப்பந்தம் மூலமாக ஏர்டெல், ஜியோ போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்று வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னரே லுப்ட்ஹன்சா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கதார் ஏர்வேஸ், எமிரேட்ஸ் போன்ற வெளிநாட்டு விமானங்களில் இந்த வசதி இருந்தாலும் அந்த விமானங்களுக்கு இந்திய விமான எல்லையில் இணைய தொடர்பு கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.