ராஜ்யசபா எம்.பி., சகோதரர் மீது தாக்குதல் : 5 பேர் கைது

நீலகிரி : உதகை அருகே கேத்தியில் ராஜ்யசபா எம்.பி., அர்ஜூணனின் சகோதரரைத் தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி : உதகை அருகே கேத்தியில் ராஜ்யசபா எம்.பி., அர்ஜூணனின் சகோதரரைத் தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கேத்தியில் ராஜ்யசபா எம்பி., அர்ஜூணன் மற்றும் அவரது சகோதாரர் ஆல்துரைக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை, தேயிலை எஸ்டேட் ஆகியவை உள்ளது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் அவர்களது குடும்பத்துக்கு சொந்தமான பரம்பரை கோயிலும் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இந்த தொழிற்சாலையை விஜயராஜ் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளனர். 

இதையடுத்து, தற்போது குத்தகை காலம் முடிந்த நிலையில், விஜயராஜ் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த அமுல்ராஜ் என்பவருக்கு உள் குத்தகைக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. குத்தகை காலம் முடிந்த நிலையிலும் இவர்கள் இந்த தொழிற்சாலையை விட்டு செல்லாமல் இருந்துள்ளனர். இது தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நடந்துள்ளது. 

இந்நிலையில், ஆல்துரை கோயிலுக்கு செல்லும் போது அவரை எதிர் தரப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை தாக்கியதாகக் கூறி, அந்தியூர் பகுதியை சேர்ந்த சின்னதம்பி(34), மணிகண்டன் (26), சேகர்(34), கோபியை சேர்ந்த கணேஷ்(28), அறந்தாங்கியை சேர்ந்த விசு(36) ஆகியோரை கேத்தி போலீசார் கைது செய்தனர். 

இது குறித்து கேத்தி போலீஸார் கூறுகையில், "ராஜ்யசபா எம்.பி., அர்சஜூணன் மற்றும் அவரது சகோதரர் ஆல்துரை ஆகியோருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை மற்றும் கோயில் கேத்தியில் உள்ளது. இது தொடர்பாக நடந்த வழக்கில் இவர்களுக்கு சாதகமான முடிவு நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது. 

மேலும், கோயிலுக்கு சென்று வர எவ்வித தடையும் போடக் கூடாது என எதிர் தரப்பினருக்கு கோர்ட் உத்தரவு வழங்கியுள்ளது. இந்நிலையில், ஆல்துரை கோயிலுக்கு செல்லும் போது, அமுல்ராஜின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசியன் தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 5 பேர் ஆல்துரையை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆல்துரை அளித்த புகாரின் பேரில், அவர்கள் கைது செய்யப்பட்டனர்," என்றனர். 

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...