கோவை காருண்யா பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கோவை : காருண்யா பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : காருண்யா பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபாத் குமார் என்பவரின் மகன் அம் பேர் பிரசாந்த் கால் கோ (26). இவர் காருண்யா பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தேர்வுக்காக தங்கிப் பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வட மாநில மாணவர் அறை மாலையிலிருந்து பூட்டி இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த மாணவர்கள் ஆசிரியருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். 

இதையடுத்து, விடுதியில் இருக்கும் பொறுப்பாளர்கள் மாணவனின் அறையை தட்டிய போது உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்தது தெரிய வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, மாணவன் நைலான் கயிற்றால் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, விடுதி பொறுப்பாளர் காருண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் பின்னர் வந்த காவல்துறை மாணவனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி விடுதிக்குள் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...