கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இளைஞர் தற்கொலை முயற்சி

கோவை : கோவையில் கந்து வட்டிக் கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவையில் கந்து வட்டிக் கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தெலுங்குபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமியின் மகன் மூர்த்தி (37). இவர் தனது பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சம் வீட்டுக்குத் தெரியாமல் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து, மூர்த்திக்கு கடன் கொடுத்தவர் ரூ.3 லட்சத்துக்குப் பதிலாக ரூ.36 லட்சம் கொடுக்க வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதற்கு முன்பும் ஒருமுறை பணம் கொடுத்தவர் மிரட்டியதால், தற்கொலை முயற்சி மேற்கொண்ட மூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளார். இந்நிலையில், கடன் கொடுத்தவர் தொடர்ச்சியாக மிரட்டுவதாகக் கூறி இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மூர்த்தி, நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் அருகே வைத்து பூச்சி மருந்தைக் குடித்தார். 



இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் 108 -க்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த பந்தய சாலைக் காவல் துறையினர் மயக்க நிலையில் இருந்தவரை மீட்டு அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...