கோவை : உடல்நிலை பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வயது முதிர்ந்த கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை : உடல்நிலை பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வயது முதிர்ந்த கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் சுப்பன் (77), இவர் கடந்த 2016 -ம் ஆண்டில் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவருக்கு வயது முதிர்வின் காரணமாக அடிக்கடி தலைச்சுற்றல் மற்றும் படபடப்பு பாதிப்புகள் இருந்து வந்துள்ளது.

மேலும், சிறையிலே அவருக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கடந்த 4 -ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் சுப்பன் (77), இவர் கடந்த 2016 -ம் ஆண்டில் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவருக்கு வயது முதிர்வின் காரணமாக அடிக்கடி தலைச்சுற்றல் மற்றும் படபடப்பு பாதிப்புகள் இருந்து வந்துள்ளது.

மேலும், சிறையிலே அவருக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கடந்த 4 -ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
