கோவை : கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக வந்த ஆடி கார் மோதியதில் கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக வந்த ஆடி கார் மோதியதில் கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி (60). இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். இன்று காலை சுமார் 10 மணியளவில் துரைசாமி அவரது மனைவி மாராத்தாலையை (55), தனது டிவிஎஸ் எக்.ஸெல் வாகனத்தில் கணியூர் டோல் கேட்டை தாண்டி அவிநாசி சாலையில் அழைத்துச் சென்றிருக்கிறார். அதே நேரத்தில் Tn 39 BH 1588 என்ற எண் கொண்ட ஆடி காரானது அதிவேகமாகக் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து, வேகமாக வந்த ஆடி காரானது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கணவன் மனைவி இருவரும் ஆபத்தான சூழ்நிலையில் நீலம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக இருவர் உடலும் கொண்டு செல்லப்பட்டது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்த திருப்பூரைச் சேர்ந்த தினேஷ் பாண்டியன் (30) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.