விவசாயிகளின் டிராக்டா் டிரைலா்களுக்கு மானியம் வழங்கக் கோரி பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினா் சி.மகேந்திரன் மனு

கோவை : பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசாயிகளின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் டிராக்டா் டிரைலா்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினா் சி.மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை : பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசாயிகளின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் டிராக்டா் டிரைலா்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினா் சி.மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி விவசாயிகள் நிறைந்த பகுதி ஆகும். அங்கு டிராக்ட்டர் டிரைலர்களுக்கு 3 டன் எடை அளவிற்கும், தண்ணீர் டேங்க் டிரைலர்களுக்கு 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவிற்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இதனை அதிகரித்து வழங்க வேண்டும் என மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.



அந்தக் கோரிக்கையில், தொண்டாமுத்தூா், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை உடுமலை, மடத்துக்குளம் பகுதிகள் விவசாயம் நிறைந்த பகுதியாகும். ஆதலால், இத்தொகுதி முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது. எனவே, அப்பகுதிகளுக்கு டிராக்ட்டர் டிரைலர்களுக்கு 6 டன் எடை அளவிற்கும், தண்ணீர் டேங்க் டிரைலர்களுக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவிற்கும் என எடையை அதிகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற, இன்று டெல்லியில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் அவர்களையும், மத்திய போக்குவரத்து செயலாளர் யுத்வீர் சிங் மாலிக் அவர்களையும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் நேரில் சந்தித்து மனு அளித்தார். 

இதனையடுத்து, மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் மனுவினை பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். 

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...