கிக்கானி இரயில்வே மேம்பாலம் அருகே கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள்; போக்குவரத்து நெரிசலில் திணறும் வாகன ஒட்டிகள்

கோவை : வடகோவை அருகே உள்ள சாஸ்திரி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் சாக்கடை வடிகால் பணிகள் நடைபெறுவதால் வடகோவை சாலை மற்றும் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வாகன ஒட்டிகள் அவதியடைந்தனர்.


கோவை : வடகோவை அருகே உள்ள சாஸ்திரி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் சாக்கடை வடிகால் பணிகள் நடைபெறுவதால் வடகோவை சாலை மற்றும் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வாகன ஒட்டிகள் அவதியடைந்தனர்.



கோவை மாநகராட்சியால், சாஸ்திரி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கபாலம் பகுதி மற்றும் சாலை அருகே உள்ள பகுதிகளில் சாக்கடை வடிகால் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அச்சாலை அடைக்கப்பட்டுள்ளது. அச்சாலை வழியாக ராம் நகர், மேட்டுப்பாளையம் சாலை, புருக்பாண்ட் சாலை ஆகிய பகுதிகளுக்கு வாகன ஒட்டிகள் சென்று வந்தனர். 



கடந்த ஒரு வாரம் காலமாக அச்சாலை அடைக்கப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையும் முறையாக இல்லாததால் வடகோவை சுற்றியும், வடகோவை மேம்பாலம் வழியாகவும் வாகன ஒட்டிகள் செல்லும் சூழல் நிலவி வருகிறது. இதனால் புருக்பாண்ட் சாலை வழியாகச் செல்வோர் அவினாசி மேம்பாலம் கீழ் பகுதி வழியாகச் செல்கின்றனர். 



இதன் காரணமாக இவ்விரு மேம்பாலங்களிலும், வடகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சாலையிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஒட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். இது போலவே, மாநகராட்சி பணிகள் நடைபெறும் போது மாற்றுப் பாதை முறையாக அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.



மாநகராட்சி ஊழியர் ஒருவர் கூறும் போது இந்தப் பணிகள் இன்னும் 20 நாட்கள் நடைபெற உள்ளது என்றார்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...