உடுமலையில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி பெண் ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் : உடுமலை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தங்களுக்குத் தர வேண்டிய நிலுவை தொகையைத் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறி நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூர் : உடுமலை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தங்களுக்குத் தர வேண்டிய நிலுவை தொகையைத் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறி நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

திருப்பூா் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவா்களில் 103 பெண்களுக்கு கடந்த ஒரு வருடமாக வழங்க வேண்டிய நிலுவை தொகை சரியாக வழங்கப்படாததாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ரூ.30 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்க வேண்டிய சூழலில், அதனை வழங்காமல் பணியாளா்களை அலைகழித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையே, இன்று தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக அனைவருக்கும் வழங்கக் கோரி பெண் ஊழியா்கள் நகராட்சி அலுவலகம் முன் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். 



நடவடிக்கை எடுக்காவிடில், இன்று இரவிலும் தொடா்ந்து நகராட்சி வளாகத்திலேயே காத்திருக்க போவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், நிலுவை தொகையை முழுமையாக வழங்காமல் போராட்டத்தை முடிக்க போவதில்லை என துப்புரவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தொடா் போராட்டத்தினால் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கும் வாய்ப்புள்ளது. எனவே, மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க நகராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளா்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயற்சி மேற்கொள்கின்றனர்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...