கோவை : மேட்டுப்பாளையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் வந்த விரியன் பாம்பை மீட்டு பாம்பு பிடிப்பவர்கள் காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.
கோவை : மேட்டுப்பாளையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் வந்த விரியன் பாம்பை மீட்டு பாம்பு பிடிப்பவர்கள் காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.

நேற்றிரவு, யாரும் எதிர்பாராத சமயத்தில் நான்கடி நீளமுள்ள ரசூல் விரியன் பாம்பு ஒன்று மேட்டுப்பாளையம் அருகே உள்ள குடியிருப்புப்பகுதிக்குள் நுழைந்தது. ஓடந்துறை மாரியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதியில் உலா வந்த ரசூல் விரியனை, பாம்பு பிடிப்பவர்களான சாகுல் ஹமீட், ஜெரால்டு இருவரும் இணைந்து பிடித்தனர்.

இதையடுத்து, உயிர் சேதம் ஏற்படாமல் மீட்ட அந்தப் பாம்பை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான ஜக்கானாரில் கொண்டு விட்டனர்.