நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை துரத்திய காட்டு யானைகள் : சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகளை சவாரி அழைத்துச் சென்ற வனத்துறையின் வாகனத்தை காட்டு யானைகள் துரத்தும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


நீலகிரி : முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகளை சவாரி அழைத்துச் சென்ற வனத்துறையின் வாகனத்தை காட்டு யானைகள் துரத்தும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் வேன் மற்றும் ஜீப் மூலம் சவாரி அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த நிலையில், முதுமலைக்கு வந்த சில சுற்றுலாப் பயணிகள், வனத்துறை வாகனத்தில் வனப்பகுதிக்குள் சுற்றிப் பார்க்கச் சென்றனர். அங்கு அடர்ந்த வனப் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் அமைதியாக மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தது. அப்போது, காட்டு யானைகளுக்கு அருகே நிறுத்தப்பட்ட வாகனத்தில் இருந்தவர்கள், அந்த யானை கூட்டத்தை தொந்தரவு செய்தனர். இதனால், கோபமடைந்த காட்டு யானை, அந்த வாகனத்தை துரத்த ஆரம்பித்தது. 



பின்னர், அதன் அருகில் இருந்த மற்றொரு காட்டு யானை வந்தவுடன், இரண்டும் சேர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனத்தை விடாமல் துரத்தியுள்ளது. வாகன ஓட்டுநர் திறமையுடன் வாகனத்தை வேகமாக இயக்கி சற்று தொலைவில் நிறுத்தினார். இதனால், அந்த யானைகள் அருகே இருந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனத்தில் இருந்தவர்கள் பெருமூச்சுவிட்டனர். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...