கோவையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ. 10,000 வரை அபராதம்

கோவை : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்க கோவை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கோவை : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்க கோவை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மாற்றுப் பொருட்களை மக்களிடையே கொண்டும் பணிகளில் அனைத்து மாவட்டங்கள் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சியின் சார்பில், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை சட்டம், 2016-ன்படி, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் காகிதங்கள் அல்லது பல அடுக்குகளைக் கொண்ட பிளாஸ்டிக் பேக்கிங் பொருட்களை தயாரிக்கவோ, விற்கவோ தடை செய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சில்லறை வியாபாரிகள், தெரு வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை சட்டம், 2016-ன்படி அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், சில்லறை வியாபாரிகள், தெரு வியாபாரிகள் மற்றும் கோவை மாநகராட்சியிடம் பதிவு செய்யாத விற்பனையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்க இந்த தீர்மானம் வழிவகை செய்கிறது. 

50 மைக்ரானுக்கு கீழாக இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தயார் செய்தல், இருப்பு வைத்தல், விற்பனை அல்லது கொண்டு செல்லுதல் ஆகியவற்றில் ஈடுபட்டால், ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும். மொத்த வியாபாரிகள், தரகர்கள், விநியோகஸ்தகர்களுக்கு ரூ. 10,000-மும், சில்லறை வியாபாரிகளுக்கு ரூ. 5,000-மும், தெரு வியாபாரிகளுக்கு ரூ. 2,000-மும், பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு ரூ. 100-ம் அபராதமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை சட்டம், 2016-ன் விதிகளின்படி, சில்லறை வியாபாரிகள், தெரு வியாபாரிகள் விற்கப்படும் பொருட்கள் பேக் செய்யப்பட்டிருக்கும் பைகளில் விதிமுறைகள் குறிப்பிடாமல் இருந்தால், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...