மகாகவி பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் மற்றும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமாருக்கு பாரதி விருது

கோவை : மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் மற்றும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமாருக்கு பாரதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கோவை : மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் மற்றும் எழுத்தாளருமான  பாரதி கிருஷ்ணகுமாருக்கு பாரதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
 

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக, பாரதி பாசறை மற்றும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா சார்பில் பாரதி விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இதில், இயக்குனர் மற்றும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமாருக்கு பாரதி விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இந்த விருதினை சிறப்பு விருந்தினர் சாகித்ய அகாடமி விருது பெற்ற பொன்னீலன் அவருக்கு வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். மேலும், கவிஞர் பாரதி கிருஷ்ணகுமாருக்கு விருதுடன், 50 ஆயிரம் ரூபாய் காசோலையும் கொடுக்கப்பட்டது.



விழாவில் விருது பெற்ற இயக்குனர் மற்றும் எழுத்தாளருமான  பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில், "நாமெல்லாம் பாரதி கண்டமண். எப்படி ஒரு மண் சரியான விதைகளை முளைக்கச் செய்கிறதோ. அதுபோல எல்லோர் மனிதனுக்குள்ளும் ஈரம் கொண்ட மனம் வேண்டும்," இவ்வாறு கூறினார்.



இவரைத் தொடர்ந்து, பேசிய சிறப்பு விருந்தினர் பொன்னீலன், கோவைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், கோவை என்பது அன்பு நிறைந்த ஊர் என புகழ்ந்துரைத்தார்.


Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...