திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு செயல்முறை விளக்கக் கூட்டம் திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு செயல்முறை விளக்கக் கூட்டம் திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றுவது என முடிவு செய்து, அதற்கான ஆயத்த பணிகளில் அனைத்து மாவட்டங்கள் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது,
இந்த நிலையில், இன்று ஓட்டல் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் தனியார் கடைகளின் உரிமையாளர்கள் ஆகியவர்களை உள்ளடக்கிய திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு செயல்முறை விளக்கக் கூட்டம் மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கிற்கு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் ஆகியோர் தலைமை வகித்தார். இதில், மாநகராட்சி நகர்நல அலுவலர் பூபதி, முதல் மண்டல ஆணையாளர் வாசுகுமார், மூன்றாம் மண்டல ஆணையாளர் சபியுல்லா உள்ளிட்ட அரசு அலுவலகர்கள் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர், மேலும், அரங்கிற்கு வெளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காட்சியும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றுவது என முடிவு செய்து, அதற்கான ஆயத்த பணிகளில் அனைத்து மாவட்டங்கள் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது,
இந்த நிலையில், இன்று ஓட்டல் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் தனியார் கடைகளின் உரிமையாளர்கள் ஆகியவர்களை உள்ளடக்கிய திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு செயல்முறை விளக்கக் கூட்டம் மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கிற்கு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் ஆகியோர் தலைமை வகித்தார். இதில், மாநகராட்சி நகர்நல அலுவலர் பூபதி, முதல் மண்டல ஆணையாளர் வாசுகுமார், மூன்றாம் மண்டல ஆணையாளர் சபியுல்லா உள்ளிட்ட அரசு அலுவலகர்கள் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர், மேலும், அரங்கிற்கு வெளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காட்சியும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.