டெல்லி : காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைத்த பிரதமர் மோடிக்கு பலத்த அடி கிடைத்துள்ளதாக என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைத்த பிரதமர் மோடிக்கு பலத்த அடி கிடைத்துள்ளதாக என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 103 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 117 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
இதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 198 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 86 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை (புதன்கிழமை) அந்தந்த மாநில தலைநகரங்களில் நடைபெறவுள்ளது.
இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கட்சியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், "காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைத்த பிரதமர் மோடிக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற அனைவருக்கும் தி.மு.க. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 5 மாநில தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும். பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது," என்றார்.
சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 103 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 117 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
இதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 198 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 86 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ.க. வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 60 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடனும் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை தொடங்கியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை (புதன்கிழமை) அந்தந்த மாநில தலைநகரங்களில் நடைபெறவுள்ளது.
இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கட்சியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், "காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைத்த பிரதமர் மோடிக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற அனைவருக்கும் தி.மு.க. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 5 மாநில தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும். பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது," என்றார்.