நீலகிரி : கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நடுவட்டம் பேரூராட்சியில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான பேருந்து நிலைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
நீலகிரி : கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நடுவட்டம் பேரூராட்சியில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான பேருந்து நிலைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நடுவட்டம் பேரூராட்சியின் வழியாக, கூடலூர் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், அங்குள்ள 50 ஆண்டுகள் பழமையான பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.
இதேபோல, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து உதகைக்கு சுற்றுலா வரும் வாகனங்களும், சுற்றுலாப் பயணிகளும் நடுவட்டம் பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் இளைப்பாறி செல்கின்றனர். இதனால், பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிறு வியாபாரிகள் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில், பேரூராட்சிக்கு சொந்தமான மிக பழமையான கடைகள் மற்றும் பேருந்து நிலைய கட்டிடம் ஆகியவற்றை இடித்து மூலதன மானிய திட்டத்தில் ரூ. 3 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம், உணவகம் மற்றும் புதிய கடைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே, இதில் கடைகளை நடத்தி வந்தவர்களால், பேரூராட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் முடிவடைந்ததை அடுத்து, இன்று காலை முதல் கட்டிடங்களை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றும் பணிகள் தொடங்கியது. பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராகீம் மேற்பார்வையில் பேரூராட்சி ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நடுவட்டம் பேரூராட்சியின் வழியாக, கூடலூர் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், அங்குள்ள 50 ஆண்டுகள் பழமையான பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.
இதேபோல, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து உதகைக்கு சுற்றுலா வரும் வாகனங்களும், சுற்றுலாப் பயணிகளும் நடுவட்டம் பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் இளைப்பாறி செல்கின்றனர். இதனால், பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிறு வியாபாரிகள் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில், பேரூராட்சிக்கு சொந்தமான மிக பழமையான கடைகள் மற்றும் பேருந்து நிலைய கட்டிடம் ஆகியவற்றை இடித்து மூலதன மானிய திட்டத்தில் ரூ. 3 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம், உணவகம் மற்றும் புதிய கடைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கனவே, இதில் கடைகளை நடத்தி வந்தவர்களால், பேரூராட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் முடிவடைந்ததை அடுத்து, இன்று காலை முதல் கட்டிடங்களை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றும் பணிகள் தொடங்கியது. பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராகீம் மேற்பார்வையில் பேரூராட்சி ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.