திருப்பூர் : திருப்பூரில் தனியார் கல்குவாரியில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்த போது கால்களைப் பறிகொடுத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு உரிய இழப்பீடு வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் : திருப்பூரில் தனியார் கல்குவாரியில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்த போது கால்களைப் பறிகொடுத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு உரிய இழப்பீடு வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
ஆண்டிபுதூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கல்குவாரி, வங்கிக் கடனுக்காக ஜப்தி செய்யப்பட்டு பூட்டிக் கிடக்கிறது. பூட்டிய கல்குவாரிக்கு பாதுகாவலராக அதே பகுதியைச் சேர்ந்த சுப்பன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அவருடன் பணிபுரிந்து வந்த ராமசாமி என்பவர் கவனக்குறைவாக தண்ணீர் மோட்டாரை இயக்கியதால், சுப்பனின் வேஷ்டி மோட்டாரில் சிக்கி அவரது கால் பறிபோனது. இதில், சுப்பனின் இடது கால் முழங்காலுக்கு கீழ் துண்டாகிவிட்டது.

இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுப்பனுக்கு உரிய இழப்பீடு வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், சரியான பாதுகாப்பு செய்து கொடுக்காத கல்குவாரியின் உரிமையாளர்கள் மீதும், கல்குவாரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளரையும் வழக்கில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆண்டிபுதூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கல்குவாரி, வங்கிக் கடனுக்காக ஜப்தி செய்யப்பட்டு பூட்டிக் கிடக்கிறது. பூட்டிய கல்குவாரிக்கு பாதுகாவலராக அதே பகுதியைச் சேர்ந்த சுப்பன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அவருடன் பணிபுரிந்து வந்த ராமசாமி என்பவர் கவனக்குறைவாக தண்ணீர் மோட்டாரை இயக்கியதால், சுப்பனின் வேஷ்டி மோட்டாரில் சிக்கி அவரது கால் பறிபோனது. இதில், சுப்பனின் இடது கால் முழங்காலுக்கு கீழ் துண்டாகிவிட்டது.

இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுப்பனுக்கு உரிய இழப்பீடு வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், சரியான பாதுகாப்பு செய்து கொடுக்காத கல்குவாரியின் உரிமையாளர்கள் மீதும், கல்குவாரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளரையும் வழக்கில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.