மேகதாது அணை கட்டும் முயற்சிகளை தடுக்க தமிழக அரசின் நடவடிக்கை தேவை : விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கோவை : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடகத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடகத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



கோவை தடாகம் பகுதியில் சனிக்கிழமையன்று விவசாயிகள் சங்க மாதாந்திர செயற்குழு கூட்டம், மாநிலத் தலைவர் வ.து.பாலசுப்பிரமணியம் மற்றும் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கஜா புயலில் உயிரிழந்த விவசாயிகளுக்கும், பாரம்பரிய நெல்விதைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், காவிரி மற்றும் சிறுவாணி ஆற்று நீரைத் தடுக்கும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் நடவடிக்கைகளை தடுப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக, கிராம நிர்வாக அலுவலகர்களின் வேலைநிறுத்தத்தை அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும், மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய சந்தை மதிப்பை இழப்பீடாக வழங்கவேண்டும், விவசாயிகளுக்கான அதிகபட்ச வங்கி கடன் உயர்த்தப்பட வேண்டும், வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முழுத்தொகையும் வழங்கிட வேண்டும் மற்றும் மத்திய அரசின் 'எக்கனாமிக் கோரிடோர்' திட்டத்தை கோவை வர நீட்டித்திட வேண்டும் போன்ற தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...