வைகோ பிரிவினை பேசி அரசியல் இலாபம் பெற்றவர் : கோவையில் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டு

கோவை : இடதுசாரிகள் கட்சிகளையும், திராவிட கட்சிகளையும் விமர்சித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

கோவை : இடதுசாரிகள் கட்சிகளையும், திராவிட கட்சிகளையும் விமர்சித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "5 மாநில தேர்தலில் நல்ல நிர்வாகம், ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துவிட்டு பா.ஜ.க வாக்கு சேகரித்துள்ளது. தேர்தல் கருத்துக்கணிப்புகள் எப்படி இருந்தாலும் தெலுங்கானா தவிர்த்த மற்ற மாநிலங்களில் தேர்தலில் வெற்றி பெறுவோம். பெட்ரோல் விலை குறைப்பில் பிரதமர் மோடிக்குப் பங்குண்டு அதனால் தான் பிரதமர் மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது," என்றார். 

மேலும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் சவால் குறித்து, "மத்திய நீர்வள துறை ஆணையரே தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது என சொல்லியுள்ளார். இதற்கிடையில், அவர் பிரிவினை பேசி அரசியல் இலாபம் பெறவே, ஆக்கப்பூர்வமற்ற வகையில் நிலை தடுமாறி பேசி வருகிறார்," என்று பதிலளித்தார். 

இந்நிலையில், தலைகீழாக நடந்தாலும் தாமரை மலராது என்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து குறித்த கேள்விக்கு, "தாமரை மலர நேர்மையாக நடந்தால் போதும். மேலும், திமுக கூட்டணியே பலவீனமான கூட்டணிதான், எனவே, எங்கள் கூட்டணியை பற்றி முத்தரசன் கவலைப்பட தேவையில்லை " என பதிலளித்தார். 

மேலும், அவர் பேசுகையில், "இடதுசாரிகள் ஆட்சி ஒரு மாநிலத்தில் தான் இருக்கிறது. மீதியிருக்கும் 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. காவியைப் பற்றி சிவப்புகள் கவலைப்பட வேண்டாம். மக்கள் வாழ்விற்காகத் தான் தாமரை மலர வேண்டும் என விரும்புகிறோம்," எனத் தெரிவித்தார்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...