திருப்பூர் : திருப்பூர் வணிக வரித்துறை உட்பட பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள வளாகத்தில் தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவு நீரால் அரசு அதிகாரிகள் அலுவலகம் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் : திருப்பூர் வணிக வரித்துறை உட்பட பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள வளாகத்தில் தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவு நீரால் அரசு அதிகாரிகள் அலுவலகம் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் குமரன் சாலைப் பகுதியில் வடக்கு காவல் நிலையத்தை ஒட்டியுள்ள அலுவலகத்தில் வணிக வரித்துறை அலுவலகம், ஊர்காவல்படை அலுவலகம், மதுவிலக்கு பிரிவு அலுவலகம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குமரன் சாலை வழியாகச் செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அரசு அலுவலகங்கள் உள்ள வளாகத்தில் தேங்கி நிற்கின்றன. இதனால் அரசு அலுவலகங்கள் செல்ல வந்த அலுவலர்கள் சிரமம் அடைந்தனர். மேலும், அடிக்கடி இதுபோன்று சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் அலுவலகம் செல்ல சிரமம் ஏற்படுவதாகவும், தொற்று நோய் பரவக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் குமரன் சாலைப் பகுதியில் வடக்கு காவல் நிலையத்தை ஒட்டியுள்ள அலுவலகத்தில் வணிக வரித்துறை அலுவலகம், ஊர்காவல்படை அலுவலகம், மதுவிலக்கு பிரிவு அலுவலகம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குமரன் சாலை வழியாகச் செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அரசு அலுவலகங்கள் உள்ள வளாகத்தில் தேங்கி நிற்கின்றன. இதனால் அரசு அலுவலகங்கள் செல்ல வந்த அலுவலர்கள் சிரமம் அடைந்தனர். மேலும், அடிக்கடி இதுபோன்று சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் அலுவலகம் செல்ல சிரமம் ஏற்படுவதாகவும், தொற்று நோய் பரவக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.