சென்னை: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்த விவசாயி நெல் ஜெயராமன் இன்று காலமானார்.
சென்னை: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்த விவசாயி நெல் ஜெயராமன் இன்று காலமானார்.
பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றி வந்தவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன். நம்மாழ்வாரின் இளைஞர் குழுவில் பயிற்சிபெற்ற ஜெயராமன், அவரின் வேண்டுகோளுக்கிணங்க பாரம்பர்ய நெல் ரக உற்பத்தியைப் பெருக்கிவந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை மீட்டிருக்கும் நெல் ஜெயராமன், ஒவ்வொர் ஆண்டும் திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை 2006-ம் ஆண்டு முதல் நடத்திவந்தார்.
இதற்கிடையே, இரண்டு ஆண்டுகளாகத் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் சந்தித்துப் பேசினர்.
இதற்கிடையே, இன்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி நெல் ஜெயராமன் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். 12 ஆண்டுகளாக நெல் திருவிழாவை நடத்திவந்த தேசிய விருது, மாநில விருது எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். 50 வயதாகும் இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
“தங்களது உயிர்ப் பாதுகாவலனை விவசாயிகள் இழந்துவிட்டார்கள். பாரம்பர்ய நெல் வகைகளைக் கண்டறிந்து விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியவர”என நெல் ஜெயராமன் மறைவுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றி வந்தவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன். நம்மாழ்வாரின் இளைஞர் குழுவில் பயிற்சிபெற்ற ஜெயராமன், அவரின் வேண்டுகோளுக்கிணங்க பாரம்பர்ய நெல் ரக உற்பத்தியைப் பெருக்கிவந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை மீட்டிருக்கும் நெல் ஜெயராமன், ஒவ்வொர் ஆண்டும் திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை 2006-ம் ஆண்டு முதல் நடத்திவந்தார்.
இதற்கிடையே, இரண்டு ஆண்டுகளாகத் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் சந்தித்துப் பேசினர்.
இதற்கிடையே, இன்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி நெல் ஜெயராமன் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். 12 ஆண்டுகளாக நெல் திருவிழாவை நடத்திவந்த தேசிய விருது, மாநில விருது எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். 50 வயதாகும் இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
“தங்களது உயிர்ப் பாதுகாவலனை விவசாயிகள் இழந்துவிட்டார்கள். பாரம்பர்ய நெல் வகைகளைக் கண்டறிந்து விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியவர”என நெல் ஜெயராமன் மறைவுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.