கோவை : அயோத்தியில் ராமர் கோவில் கட்டச் சிறப்பு சட்டம் இயற்றுவோம் என்ற பிரதமர் மோடியின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன்சம்பத் குற்றம்சாட்டினார்.
கோவை : அயோத்தியில் ராமர் கோவில் கட்டச் சிறப்பு சட்டம் இயற்றுவோம் என்ற பிரதமர் மோடியின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன்சம்பத் குற்றம்சாட்டினார்.
இந்து அதிரடிப்படையினர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டுமெனக் கோரி, தமிழகத்தின் புனித நதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் மற்றும் அனுமன் சிலையை அயோத்திக்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய உள்ளனர். இந்த யாத்திரையைக் கோவை உக்கடம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன்சம்பத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, அர்ஜீன்சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "டிசம்பர் 6-ம் தேதியை கரசேவை வெற்றி தினமாக இந்து மக்கள் கட்சி கொண்டாடும். பிரதமர் மோடியின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டச் சிறப்பு சட்டம் இயற்றுவோம் என்ற வாக்குறுதி 4 1/2 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படவில்லை. அதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
மேலும், திராவிடக் கட்சிகள், அம்பேத்கரைப் பற்றியும் அவரது கொள்கையைப் பற்றியும் தவறான கருத்துகளை பரப்புகின்றனர். அம்பேத்கர் இந்து மதத்தைச் சீர்திருத்த முயன்றார். அவருடைய நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ஐ.ஐ.டி.க்கு அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இந்து அதிரடிப்படையினர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டுமெனக் கோரி, தமிழகத்தின் புனித நதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் மற்றும் அனுமன் சிலையை அயோத்திக்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய உள்ளனர். இந்த யாத்திரையைக் கோவை உக்கடம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன்சம்பத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, அர்ஜீன்சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "டிசம்பர் 6-ம் தேதியை கரசேவை வெற்றி தினமாக இந்து மக்கள் கட்சி கொண்டாடும். பிரதமர் மோடியின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டச் சிறப்பு சட்டம் இயற்றுவோம் என்ற வாக்குறுதி 4 1/2 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படவில்லை. அதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
மேலும், திராவிடக் கட்சிகள், அம்பேத்கரைப் பற்றியும் அவரது கொள்கையைப் பற்றியும் தவறான கருத்துகளை பரப்புகின்றனர். அம்பேத்கர் இந்து மதத்தைச் சீர்திருத்த முயன்றார். அவருடைய நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ஐ.ஐ.டி.க்கு அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.