உதகை படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா..? : மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று உதகை மத்திய பேருந்து நிலையம், படகு இல்லம் ஆகிய பகுதிகள் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று உதகை மத்திய பேருந்து நிலையம், படகு இல்லம் ஆகிய பகுதிகள் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் ஒரு சுற்றுலா மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இம்மாவட்டத்திற்கு வருகை புரிகிறார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடன் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள், டம்பளர்கள், தட்டுகள் போன்ற பொருட்களை வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் வீசி விட்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, வனவிலங்குகள் அதனை உட்கொண்டு இறக்கும் அபாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதித்தது. இருப்பினும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறையவில்லை. இதனால், அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களுக்கும், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உதகை மத்திய பேருந்து நிலையம், படகு இல்லம் ஆகிய பகுதிகள் தூய்மையாக உள்ளதா..?, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருக்கிறதா..? என திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, உதகை படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றி மாற்று இடத்தில் சுழற்சி முறையில் கடைகளை அமைக்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...