நீலகிரி : உதகையில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுதிறனாளிகள் தின விழாவில் 50 பயனாளிகளுக்கு 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் உதவி தொகையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
நீலகிரி : உதகையில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுதிறனாளிகள் தின விழாவில் 50 பயனாளிகளுக்கு 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் உதவி தொகையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

ஆண்டுதோறும் டிசம்பர் 3-ம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று உதகையில் இயங்கி வரும் தனியார் மருந்தாக்கியல் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள செயற்கை கால்கள், செயற்கை கைகள், பார்வையற்றோருக்கான கண் லென்சுகள், காது கேளாதோருக்கான காது கேட்கும் கருவிகள் மற்றும் உதவி தொகைகள் என 50 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சமூகத்துறை, மருத்துவத்துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


ஆண்டுதோறும் டிசம்பர் 3-ம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று உதகையில் இயங்கி வரும் தனியார் மருந்தாக்கியல் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள செயற்கை கால்கள், செயற்கை கைகள், பார்வையற்றோருக்கான கண் லென்சுகள், காது கேளாதோருக்கான காது கேட்கும் கருவிகள் மற்றும் உதவி தொகைகள் என 50 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சமூகத்துறை, மருத்துவத்துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
