2 மாதங்களுக்கு முன்பு மாயமானவர் உயிரிழந்துவிட்டதாக சந்தேகம் : உடலை மீட்டுத் தரக்கோரி உறவினர்கள் கண்ணீருடன் மனு

கோவை : 2 மாதங்களுக்கு முன்பு மாயமானவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அவரது உடலை மீட்டுத் தரக்கோரி உறவினர்கள் கண்ணீருடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : 2 மாதங்களுக்கு முன்பு மாயமானவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அவரது உடலை மீட்டுத் தரக்கோரி உறவினர்கள் கண்ணீருடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த வணிகரான ஜெயவேணு என்பவர் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை வந்துள்ளார். ஆனால், அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கோவை துடியலூர் காவல் நிலையத்தில், இது தொடர்பாக புகார் அளித்தனர். ஆனால், ஜெயவேணு தொடர்பாக இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு அருகில் உள்ள கிணறு ஒன்றில் அவரது உடல் புதைக்கப்பட்டு குப்பைகளால் நிரப்பப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். 

ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று வணிகர் சங்க பேரமைப்பினருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஜெயவேணுவின் தாய் பிரேமா, மனைவி ஜெயதீபா, குழந்தைகள் கிருத்திக்ராஜ், கிருத்திகா ஆகியோர் கண்ணீருடன் ஜெயவேணுவை கண்டுபிடித்து தருமாறு மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது :- ஜெயவேணுவின் உடலை மீட்டுத்தர போலீசார் தாமதிக்கின்றனர். குற்றவாளிகளைப் பாதுகாக்க போலீசார் முயல்கின்றனர். ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவதில் உள்நோக்கம் இருக்கிறது, என்றனர். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...