கோவை : கோவை கொடிசியாவில் அடுத்த ஆண்டு ஜுலை 19-ம் தேதி தொடங்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியில், முதல்முறையாக இந்த ஆண்டு முதல் 3 இலக்கிய விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை : கோவை கொடிசியாவில் அடுத்த ஆண்டு ஜுலை 19-ம் தேதி தொடங்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியில், முதல்முறையாக இந்த ஆண்டு முதல் 3 இலக்கிய விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக, ஆண்டுதோறும் ஒரு மூத்த படைப்பாளிக்கு இந்தப் புத்தகவிழாவை ஒட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இது ஒரு லட்சம் ரூபாயும், விருதுச் சிற்பமும் கொண்டது. இந்த ஆண்டு முதல் மேலும் 3 இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. புனைவு, கட்டுரை, கவிதை ஆகிய மூன்று வகைகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. அதோடு, தலா ரூ. 25,000 மற்றும் விருதுச் சான்றிதழும் அடங்கியது.
இவ்விருதுக்குரிய படைப்புகள் 2017, 2018-ல் வெளியானவையாக இருக்க வேண்டும். பரிசு பெறுவோர் 1-1-2019 அன்று 40 வயதை மிகாதவர்களாக இருக்க வேண்டும். படைப்புகள் நூறு பக்கங்களுக்கு குறையாதவையாக இருக்க வேண்டும். [கவிதை நூல்களுக்கு விதிவிலக்கு] படைப்புகளை அது தன்னால் எழுதப்பட்டது, நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்னும் தற்சான்றுடன் அனுப்ப வேண்டும்.
வழக்கமாக, ஆண்டுதோறும் ஒரு மூத்த படைப்பாளிக்கு இந்தப் புத்தகவிழாவை ஒட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இது ஒரு லட்சம் ரூபாயும், விருதுச் சிற்பமும் கொண்டது. இந்த ஆண்டு முதல் மேலும் 3 இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. புனைவு, கட்டுரை, கவிதை ஆகிய மூன்று வகைகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. அதோடு, தலா ரூ. 25,000 மற்றும் விருதுச் சான்றிதழும் அடங்கியது.
இவ்விருதுக்குரிய படைப்புகள் 2017, 2018-ல் வெளியானவையாக இருக்க வேண்டும். பரிசு பெறுவோர் 1-1-2019 அன்று 40 வயதை மிகாதவர்களாக இருக்க வேண்டும். படைப்புகள் நூறு பக்கங்களுக்கு குறையாதவையாக இருக்க வேண்டும். [கவிதை நூல்களுக்கு விதிவிலக்கு] படைப்புகளை அது தன்னால் எழுதப்பட்டது, நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்னும் தற்சான்றுடன் அனுப்ப வேண்டும்.