பிரதமர் மோடிக்குப் புகழாரம் சூட்டிய நடிகர் ரஜினி

சென்னை : நாட்டின் முன்னேற்றத்திற்காக மோடி கூடுதலாக முயற்சி செய்கிறார் என பிரதமர் மோடியைப் பற்றி நடிகர் ரஜினி பெருமையாகப் பேட்டியளித்துள்ளார்.


சென்னை : நாட்டின் முன்னேற்றத்திற்காக மோடி கூடுதலாக முயற்சி செய்கிறார் என பிரதமர் மோடியைப் பற்றி நடிகர் ரஜினி பெருமையாகப் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழல், படங்கள், தனது அரசியலில் தன் நிலைப்பாடு குறித்து இந்தியா டுடே இதழுக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்றொரு கேள்வி இடம் பெற்றிருந்தது. 

அதற்குப் பதில் அளித்த ரஜினி," பிரதமர் மோடி நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காகக் கடினமாக முயற்சி செய்கிறார். அந்த முயற்சியில் அவர் தன்னுடைய சிறப்பைக் கொடுக்கிறார். இப்போதைக்கு நான் இதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன்," எனக் கூறினார். 

அந்நேரத்தில் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப்பற்றி பதிலளித்தவர், "தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது. தமிழர்கள் ஆற்றல் வாய்ந்தவர்கள். இருப்பினும் அவர்கள் யார், அவர்களின் திறமைகள், பலம், அறிவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டார்கள். அனைத்தும் இருந்தும் அவற்றை கையாளத் தெரியாமல் இருக்கிறார்கள். 

எனவே, தமிழக மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும். அவர்களிடம் வாக்குகளை பெறுவதைக் காட்டிலும் அதுவே முக்கியமானது," எனக் கூறியுள்ளார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...