கோவையில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

கோவை : மேட்டுப்பாளையத்தில் 5 ஆண்டுகளாக காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் 5 ஆண்டுகளாக காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேட்டுப்பாளையத்தை அடுத்த வடமங்கலகரை அருகே உள்ள அம்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் வித்யா. இவரும் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அரவிந்துக்கு வித்யா மட்டுமின்றி வேறு சில பெண்களிடமும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து வித்யாவுக்கு தெரியவரவே, நேற்று அரவிந்தை தான் பணிபுரியும் இடத்திற்கு வருமாறு தொலைபேசியில் அழைத்துள்ளார். அங்கு சென்ற அரவிந்திற்கும் வித்யாவிற்கும் விவாதம் ஏற்பட்டுள்ளது. அரவிந்திற்கு வேறு சில தொடர்புகள் இருந்த காரணத்தால் வித்யாவை திருமணம் செய்ய மறுத்தது மட்டுமில்லாமல், வித்யாவை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து, வித்யா நேற்றிரவு தனது தயாரிடம் நடந்தவற்றைக் கூறி வருத்தப்பட்டுள்ளார். வித்யாவின் தாயார் அவரைத் தேற்றி தூங்க வைத்துள்ளார். இந்நிலையில், வித்யாவை காலையில் காணவில்லை. அதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து வித்யாவை ஊரெங்கும் தேடி உள்ளனர். ஆனாலும், அவர் கிடைக்கவில்லை.

இதனால் பதற்றமடைந்த வித்யாவின் பெற்றோர் காரமடை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்பு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே பெண்கள் அணியும் காலணி மற்றும் அணியும் ஆடை இருப்பதாகத் தகவல் கிடைத்து. அந்த இடத்திற்கு விரைந்த போலீசார், கிடைத்த தகவல்களை ஆராய்ந்து அது வித்யாதான் என உறுதி செய்தனர்.



இதனையடுத்து, மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் வித்யாவின் உடல் தேடப்பட்டது. பல மணிநேர தேடுதலுக்கு பின் வித்யாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

மேலும், காதலித்து தன் மகளை ஏமாற்றி அவளுடைய மரணத்திற்குக் காரணமான, அவரது காதலன் அரவிந்த் மீது நடவடிக்கை கோரி வித்யாவின் தந்தை சார்பில் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காரமடை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...