ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மகளிர் நலம் மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையம் சார்பில் இன்று உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டது.


கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மகளிர் நலம் மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையம் சார்பில் இன்று உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டது.



இதில், கோவை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளம்பெண்கள் தங்களையும் இந்தச் சமூகத்தையும் எச்.ஐ.வி.யிடமிருநது காத்துக் கொள்வது பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு அட்டைகளை தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. எய்ட்ஸ் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு நடந்த இப்போட்டியில் சுமார் 250 மாணவியர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவர் பிரசன்னா, சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து எச்.ஐ.வி. பற்றிய தகவல்களை இளைய சமூகத்திற்கு ஏற்ற வகையில் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மகளிர் நலம் மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையத்திலிருந்து பங்கேற்ற அபர்ணா, எச்.ஐ.வி. குறித்து அறிவதில் மகளிருக்கு இருக்கும் தடைகள், தயக்கங்களை விட்டு வெளிவந்து விழிப்புணர்வு பெறுவதோடு சமூகத்தையும் பாதுகாப்பதன் மூலம் மாற்றத்தை உருவாக்கக் கூடிய தலைமைப் பண்புடையவர்களாக பெண்கள் திகழ வேண்டும் என வலியுறுத்தினார். கோவை ரோட்டரி சங்கத் தலைவர் ஜோசப் பால் மற்றும் ரோட்டரி சங்கத்தின் தகுர்பிரீத் சிங் ஆகியோரும் எச்.ஐ.வி குறித்த தகவல்கள் மற்றும் செய்ய வேண்டிய கடமைகள் குறித்துப் பேசினர்.

இதேபோல, சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, 1,500-க்கும் மேற்பட்ட ரெட் ரிப்பன்கள் வழங்கப்பட்டன. மேலும், 1,500-க்கும் மேற்பட்ட எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டன. 



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...