நீலகிரி : உதகையில் இயங்கி வரும் சர்வதேச தனியார் மருந்தாக்கியல் படிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு படித்து முடித்த மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் இன்று ஒன்று கூடி உதகை அரசு தலைமை மருத்துவமனையில் மரக்கன்று நடவு செய்தனர்.
நீலகிரி : உதகையில் இயங்கி வரும் சர்வதேச தனியார் மருந்தாக்கியல் படிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு படித்து முடித்த மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் இன்று ஒன்று கூடி உதகை அரசு தலைமை மருத்துவமனையில் மரக்கன்று நடவு செய்தனர்.
உலகம் முழுவதும் டிசம்பர் 1-ம் தேதி எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் தனியார் மருந்தாக்கியல் கல்லூரியில், கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து 1986-ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஆண்டுதோறும் ஒன்றுகூடி உதகையில் மரக்கன்று நடவு செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்த நிலையில், தற்போது வெளி மாநிலங்களிலும், அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் மருத்துவர்களாகப் பணியாற்றுபவர்கள், இன்று உலக எய்ட்ஸ் தினத்தை கடைப்பிடிக்கும் வகையில், ஒன்றுகூடி உதகை அரசு தலைமை மருத்துவமனையில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் படித்த நீலகிரி மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இயற்கை மரங்களை நடவு செய்வது குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் டிசம்பர் 1-ம் தேதி எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் தனியார் மருந்தாக்கியல் கல்லூரியில், கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து 1986-ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஆண்டுதோறும் ஒன்றுகூடி உதகையில் மரக்கன்று நடவு செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்த நிலையில், தற்போது வெளி மாநிலங்களிலும், அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் மருத்துவர்களாகப் பணியாற்றுபவர்கள், இன்று உலக எய்ட்ஸ் தினத்தை கடைப்பிடிக்கும் வகையில், ஒன்றுகூடி உதகை அரசு தலைமை மருத்துவமனையில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் படித்த நீலகிரி மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இயற்கை மரங்களை நடவு செய்வது குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.