கோவையில் பிரபல ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒரு பெண் கைது

கோவை : பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணொருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை : பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணொருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 29). இவர் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்ந்து கைதாகும் காரணத்தால் போலீசார் அவரை ரவுடிகள் பட்டியலில் சேர்த்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி சாமநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு கும்பலால் பிரவின் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சாமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் நெல்லையைச் சேர்ந்த முருகேசன் உள்பட 5 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், தற்போது கொலையில் தொடர்பு இருப்பதாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் குமாரின் தாயார் சரசா என்கிற சரஸ்வதி (வயது 58), என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...