கோவை : மனித-விலங்கு மோதல்களில் சேதத்திற்குள்ளாகும் பயிர்களுக்கு இழப்பீடு தரும் புதிய திட்டம் மத்திய வேளாண் அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது.
கோவை : மனித-விலங்கு மோதல்களில் சேதத்திற்குள்ளாகும் பயிர்களுக்கு இழப்பீடு தரும் புதிய திட்டம் மத்திய வேளாண் அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு விளைவிக்கும் பயிர்கள் இயற்கைச் சீற்றங்களாலும், பருவமழை பொய்ப்பிலும் இழப்பைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வெகுநாட்களாக விலங்குகளால் ஏற்படும் சேதத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்படியும் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தனர்.
இதையெடுத்து, இந்திய மத்திய வேளாண் அமைச்சகம் வனவிலங்குகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கான நஷ்டத்தை ஈடு செய்ய பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த புதன் கிழமை, பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையை அடிப்படையாகக் கொண்டு இதன் வரையறைகள் எழுதப்பட்டது.

மனித-விலங்கு மோதல்களின் விளைவாக ஏற்படும் கால்நடையின் எண்ணிக்கையை விடப் பயிர் சேதங்களின் அளவு அதிகமாகவுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நேரும் பாதிப்புகளை குறைக்கும் விதமாக மத்திய அரசு இத்திட்டதினை அறிவித்துள்ளது.
மேலும், மத்திய வேளான் அமைச்சகம், "இம்முறை காப்பீட்டு நிறுவனம் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 10% கடன் அல்லாத விவசாயிகளை இணைக்க வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மொத்த பிரீமியத்தில் 0.5% வரை செலவிடலாம்." என்று தெரிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த விவசாயிகள் இது குறித்து கூறுகையில், "இதுவரையிலும் பயிர் இழப்பீடுகளே எங்களுக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்ததில்லை. எனவே, இது போன்ற புதுத் திட்டங்களை நம்புவது சிரமமாக உள்ளது", என்றனர்.
விவசாயிகளுக்கு விளைவிக்கும் பயிர்கள் இயற்கைச் சீற்றங்களாலும், பருவமழை பொய்ப்பிலும் இழப்பைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வெகுநாட்களாக விலங்குகளால் ஏற்படும் சேதத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்படியும் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தனர்.
இதையெடுத்து, இந்திய மத்திய வேளாண் அமைச்சகம் வனவிலங்குகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கான நஷ்டத்தை ஈடு செய்ய பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த புதன் கிழமை, பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையை அடிப்படையாகக் கொண்டு இதன் வரையறைகள் எழுதப்பட்டது.

மனித-விலங்கு மோதல்களின் விளைவாக ஏற்படும் கால்நடையின் எண்ணிக்கையை விடப் பயிர் சேதங்களின் அளவு அதிகமாகவுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நேரும் பாதிப்புகளை குறைக்கும் விதமாக மத்திய அரசு இத்திட்டதினை அறிவித்துள்ளது.
மேலும், மத்திய வேளான் அமைச்சகம், "இம்முறை காப்பீட்டு நிறுவனம் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 10% கடன் அல்லாத விவசாயிகளை இணைக்க வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மொத்த பிரீமியத்தில் 0.5% வரை செலவிடலாம்." என்று தெரிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த விவசாயிகள் இது குறித்து கூறுகையில், "இதுவரையிலும் பயிர் இழப்பீடுகளே எங்களுக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்ததில்லை. எனவே, இது போன்ற புதுத் திட்டங்களை நம்புவது சிரமமாக உள்ளது", என்றனர்.