ரயில் மோதி ஆண் யானை உயிரிழப்பு

திருவனந்தபுரம் : கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் ரயில் மோதி ஆண் யானை உயிரிழந்துள்ளது.


திருவனந்தபுரம் : கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் ரயில் மோதி ஆண் யானை உயிரிழந்துள்ளது.

தமிழக கேரளா எல்லையோரம் அமைந்து உள்ள கஞ்சிக்கோடு வனப்பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானை ரயில் மோதி உயிரிழந்துள்ளது. வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் யானை உயிரிழந்து கிடப்பதை எதேச்சையாகக் கண்டு, ரயில்வேக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் இந்த விபத்தினை குறித்து விசாரித்து வருகின்றனர். ஆனால், இதுவரையிலும் எந்த ரயில் மோதியதில் யானை உயிரிழந்தது என்பது குறித்த தகவல் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை. 



மேலும், இரவு முதல் அதிகாலை வரை அவ்வழியாகச் சென்ற ரயில் ஓட்டுனர்களிடம் இது குறித்து தற்போது கேரள ரயில்வே துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, யானையை பிரேதப் பரிசோதனை செய்யும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். 

கடந்த சில மாதங்களாக ரயில் விபத்துகளில் யானை உயிரிழப்பு குறைந்து வந்த சூழலில், மீண்டும் ஒரு ஆண் யானை உயிரிழந்த சம்பவம் வனத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...