கோவை : அரசுப் பேருந்துகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் புகார்களை தெரிவிக்கும் வசதியை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை அறிமுகம் செய்துள்ளது.
கோவை : அரசுப் பேருந்துகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் புகார்களை தெரிவிக்கும் வசதியை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை பிராந்தியத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 பிரிவுகள் உள்ளன. இந்த நான்கு பிரிவுகளில் மட்டும் 45 பேருந்து டிப்போக்கள் அமைந்துள்ளன. இந்த டிப்போக்களில் 3,000 பேருந்துகள் ஓடுகின்றன. கோவையில் மட்டும் 722 டவுன் பேருந்துகளும், 353 வெளியூர் செல்லும் பேருந்துகளும் என மொத்தம் 1,075 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் 5 லட்சத்திற்கும் அதிகமான கி.மீட்டர்கள் வரை ஓடிவிட்டன. இதனால், பேருந்துகள் பழுதடைந்து பாதியில் நிற்கும் அவலங்களை பயணிகள் நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். இதனிடையே, தமிழக அரசு அண்மையில் 155 புதிய பேருந்துகளை அறிவித்தது. அதில், 73 பேருந்துகள் கோவை பிராந்தியத்திற்காக இயக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால், அதிகளவு கரும்புகை வெளியிடுதல், மேற்புறத்தில் மழைநீர் ஒழுகுதல் போன்ற பிரச்சினைகளை கொண்ட பேருந்துகளிலேயே பயணிகள் பயணித்து வருகின்றனர்.
எனவே, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், 94425 01920 என்ற எண்ணிற்கு பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் புகார்களை தெரிவிக்கும் வசதியை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை அறிமுகம் செய்துள்ளது.