நீலகிரியில் நிலவும் அடர் பனி மற்றும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடும் குளிரும், பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடும் குளிரும், பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலையில் லேசான சாரல் மழைப் பெய்தது. அதோடு, பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால் மலைப் பகுதிகளில் இருந்து பகல்நேரங்களில் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு செல்ல மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே வாகனங்களை இயக்கி வருகின்றனர்.



இந்த காலநிலையினை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டினாலும், அவ்வப்போது வந்து செல்லும் மேக மூட்டம் இயற்கை காட்சிகளை மறைப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும், கடும் குளிரின் காரணமாக தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. உதகையில் இரவு துவங்கி இன்று காலை வரையில் 16.2 மில்லி மீட்டர் சாரல் மழைப் பெய்துள்ளது.

இதே போன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 11 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பகல் நேரத்திலேயே பொதுமக்கள் நெருப்பூட்டி குளிர் காயவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...