கோவை : திருமண வரன்கள் தொடர்ந்து தள்ளிப் போனதால் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : திருமண வரன்கள் தொடர்ந்து தள்ளிப் போனதால் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த நல்லகண்ணு என்பவரது மகள் காயத்ரி (23). இவர் தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள், பல்வேறு இடங்களில் மாப்பிள்ளைகளை பார்த்துள்ளனர். அதேபோல, கிட்டத்தட்ட ஐந்திற்கும் மேற்பட்ட மாப்பிள்ளைகள் காயத்ரியை பார்த்துவிட்டு எந்த பதிலும் கூறாமல் சென்றுவிட்டனர். இன்றும் மாப்பிள்ளை வீட்டார் இந்த இளம்பெண்ணை பார்த்துவிட்டு எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டனர்.
இதனால் மனம் உடைந்து போன காயத்ரி, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது கதறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டில் நுழைந்து காப்பாற்ற முற்பட்டனர். ஆனால், உடல் முழுவதும் எரிந்ததால் இளம்பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னே உயிரிழந்தார். பின்னர், இவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த நல்லகண்ணு என்பவரது மகள் காயத்ரி (23). இவர் தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள், பல்வேறு இடங்களில் மாப்பிள்ளைகளை பார்த்துள்ளனர். அதேபோல, கிட்டத்தட்ட ஐந்திற்கும் மேற்பட்ட மாப்பிள்ளைகள் காயத்ரியை பார்த்துவிட்டு எந்த பதிலும் கூறாமல் சென்றுவிட்டனர். இன்றும் மாப்பிள்ளை வீட்டார் இந்த இளம்பெண்ணை பார்த்துவிட்டு எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டனர்.
இதனால் மனம் உடைந்து போன காயத்ரி, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது கதறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டில் நுழைந்து காப்பாற்ற முற்பட்டனர். ஆனால், உடல் முழுவதும் எரிந்ததால் இளம்பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னே உயிரிழந்தார். பின்னர், இவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.