நீலகிரி : குன்னூர் அருகே டெரேமியா பகுதியில் குட்டியுடன் நுழைந்த 4 காட்டு யானைகள் விளை நிலத்தை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்
நீலகிரி : குன்னூர் அருகே டெரேமியா பகுதியில் குட்டியுடன் நுழைந்த 4 காட்டு யானைகள் விளை நிலத்தை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தூதூர் மட்டம், மஞ்சக்கம்பை, மேலூர் ஒசட்டி, ஒடயரட்டி, கெரடாலீ்ஸ், டெரேமியா உள்ளிட்ட பகுதிகள் குந்தாவனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதிகள் அடர்ந்த தேயிலை தோட்டம், விளைநிலம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. மேற்கண்ட பகுதிகளில் தேயிலை தோட்டத்தை முறையாக தோட்ட உரிமையாளர்கள் பராமரிக்காததால் முட்புதர்கள் சூழ்ந்து சோலை போல் காட்சி அளித்து வருகிறது.
இந்நிலையில், மஞ்சக்கம்பை வழியாக ஒடயரட்டி கிராமத்தில் குட்டியுடன் கூடிய 4 காட்டு யானைகள் நுழைந்தன. டெரேமியா பகுதியில் உள்ள 10-ம் நம்பர் எஸ்டேட் அருகே விளைநிலத்தில் நுழைந்து அங்கிருந்த பயிர்களையும், தண்ணீர் மோட்டார்கள், தடுப்புகள், குழாய்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றது.

இதனால், அப்பகுதி பகுதி விவாயிகளுக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 10-ம் நம்பர் எஸ்டேட் பகுதி தூதூர் மட்டம், கெரடாலீஸ், அணிமன் உள்ளிட்ட பகுதிகளில் யானைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் அதிகளவில் இருப்பதால் அவைகள் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தவேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தூதூர் மட்டம், மஞ்சக்கம்பை, மேலூர் ஒசட்டி, ஒடயரட்டி, கெரடாலீ்ஸ், டெரேமியா உள்ளிட்ட பகுதிகள் குந்தாவனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதிகள் அடர்ந்த தேயிலை தோட்டம், விளைநிலம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. மேற்கண்ட பகுதிகளில் தேயிலை தோட்டத்தை முறையாக தோட்ட உரிமையாளர்கள் பராமரிக்காததால் முட்புதர்கள் சூழ்ந்து சோலை போல் காட்சி அளித்து வருகிறது.
இந்நிலையில், மஞ்சக்கம்பை வழியாக ஒடயரட்டி கிராமத்தில் குட்டியுடன் கூடிய 4 காட்டு யானைகள் நுழைந்தன. டெரேமியா பகுதியில் உள்ள 10-ம் நம்பர் எஸ்டேட் அருகே விளைநிலத்தில் நுழைந்து அங்கிருந்த பயிர்களையும், தண்ணீர் மோட்டார்கள், தடுப்புகள், குழாய்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றது.

இதனால், அப்பகுதி பகுதி விவாயிகளுக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 10-ம் நம்பர் எஸ்டேட் பகுதி தூதூர் மட்டம், கெரடாலீஸ், அணிமன் உள்ளிட்ட பகுதிகளில் யானைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் அதிகளவில் இருப்பதால் அவைகள் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தவேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.