கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி நொய்யல் ஆற்றில் மீண்டும் மணல் கொள்ளை

கோவை : நரசிபுரம் அருகே உள்ள நொய்யல் ஆற்றுப்படுகையில் கழுதைகளை பயன்படுத்தி இரவு, பகலாக மணல் கடத்தப்படுகிறது.

கோவை : நரசிபுரம் அருகே உள்ள நொய்யல் ஆற்றுப்படுகையில் கழுதைகளை பயன்படுத்தி இரவு, பகலாக மணல் கடத்தப்படுகிறது.



பல வருடங்களாகவே சட்டத்திற்கு புறம்பாக ஆலந்துறை, நரசிபுரம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து நொய்யல் ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து புகார் கொடுத்தனர். 

அந்தப் புகாரின் பேரில் விதிமுறைகளை மீறி மணல் எடுப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரித்தார். அந்த எச்சரிக்கையினால் சிறிது காலம் மணல் கொள்ளை சம்பவங்கள் குறைந்தது. ஆனால், சில நாட்களாக நரசிபுரம் அருகே மணல் கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன.

மேலும், நொய்யல் ஆற்றுப்படுகையில் கழுதைகள் மற்றும் வாகனங்களை வைத்து 24 மணி நேரமும் மணல் கொள்ளை தொடர்ந்து நிகழ்கிறது. முன்பு இரவு நேரங்களில் மணலைக் கடத்தி வந்த கும்பல், தற்போது பகலில் கழுதைகளை வைத்து மணல் கொள்ளையில் ஈடுபடுகிறது. 

மாவட்ட ஆட்சியர் அறிவித்த 7 மாதங்களிலேயே நொய்யலில் மீண்டும் மணல் கொள்ளை நடப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...