ரூ. 78.50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்ட நீலகிரி ஆட்சியர்

நீலகிரி : உதகை நகராட்சி மற்றும் கேத்தி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் ரூ. 78.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி : உதகை நகராட்சி மற்றும் கேத்தி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் ரூ. 78.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கம்மந்து முதல் கெரடா கிராமம் வரை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 1.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கிரீட் நடைபாதை பணியினையும், தொட்டண்ணியில் ரூ. 1 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட தடுப்புசுவருடன் கூடிய நடைபாதை பணியினையும், கேத்தொரை பகுதியில் ரூ. 1.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட குழாய் அமைக்கும் பணியினையும் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.

மேலும், காந்திநகர், இந்திரா நகர், உல்லாடா, அச்சனக்கல், சாந்தூர், பழைய அருவங்காடு, தேனலை கிராமம், சோகத்தொரை, சக்கலட்டி ஆகிய பகுதிகளில் தலா ரூ. 1.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 10 குதிரைத் திறன் மற்றும் 7.5 குதிரைத்திறன் கொண்ட திறந்தவெளி நீர்இறைக்கும் இயந்திரத்தினையும் என மொத்தம் ரூ. 17.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

முன்னதாக, உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தள் முக்கோணம் பகுதியில் ரூ. 46 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு கட்டப்பட்டு வரும் கூடத்தினையும், ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் படகு இல்லத்தில் குப்பைகள் கொட்டாமல் தடுப்பதற்காக கட்டப்பட்டு வரும் தடுப்பு வேலிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, உதவி இயக்குநர் மனோரஞ்சிதம், உதகை நகராட்சி பொறியாளர் ரவி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...