திருப்பூர் : திருப்பூர் அருகே அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகள் நெஞ்சை பதறவைக்கும்படியாக உள்ளது.
திருப்பூர் : திருப்பூர் அருகே அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகள் நெஞ்சை பதறவைக்கும்படியாக உள்ளது.
பல்லடம் - தாராபுரம் சாலை துத்தாரி பாளையம் பகுதியில் கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் படியில் தொங்கி துத்தாரி பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (45) என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

தந்தூரிபாளையம் அருகே பேருந்து சென்றபோது, சாலையில் டிவைடர் வைக்கப்பட்டிருந்ததை அலட்சியப்படுத்தி ஓட்டுநர் வேகமாக பேருந்தை இயக்கினார். இதில், பேருந்தில் பயணம் செய்த சின்னசாமி எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை காமநாயக்கன்பாளையம் போலீசார் ஆராய்ந்து பார்த்தனர். அதில், பேருந்து வேகமாக இயக்கப்பட்டதும், சின்னசாமி படியில் நின்று பயணம் மேற்கொண்டதும் உயிரிழப்பிற்குக் காரணம் என்பது தெரிய வந்தது.
