நீலகிரி : சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான முதியவர்கள் குழந்தைகளுடன் இணைந்து நடனமாடிய நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நீலகிரி : சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான முதியவர்கள் குழந்தைகளுடன் இணைந்து நடனமாடிய நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி சர்வதேச முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிர்ந்த பெற்றோர்களையும், முதியவர்களையும் போற்றும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று உதகை பிரிக்ஸ் பள்ளி அரங்கில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சர்வதேச முதியோர் தினவிழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அப்போது, முதியவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், நடைபெற்ற பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை முதியோர்கள் கண்டு ரசித்ததோடு, அவர்களும் குழந்தைகளுடன் இணைந்து நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே, நிகழ்ச்சியில் முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரின் கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியது அனைவரையும் உருகச் செய்தது.
