திருப்பூர் : காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் திருப்பூர் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் திருப்பூர் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது, துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களுக்கு, கையுறை, காலணிகள், மழைக் கால உடைகள், துடைப்பம் உள்ளிட்ட மாநகராட்சி வழங்க வேண்டிய உபரகணங்கள் எதுவும் சரியாக வழங்கப்படுவதில்லை என புகார் தெரிவித்தனர்.

மேலும், 10 ஆயிரம் பேர் பணியாற்ற வேண்டிய மாநகராட்சியில் 1000- க்கும் குறைவானவர்களே துப்புரவு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதால் பணிச்சுமை அதிகமாகிறது. இதனால் கூடுதல் நேரம் பணி புரியும் சூழல் உருவாகிறது. ஆனாலும், இதுவரை எவ்வித ஊதிய உயர்வையும் மாநகராட்சி அமல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினர்.
இந்தப் போராட்டத்தின் போது, துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தங்களுக்கு, கையுறை, காலணிகள், மழைக் கால உடைகள், துடைப்பம் உள்ளிட்ட மாநகராட்சி வழங்க வேண்டிய உபரகணங்கள் எதுவும் சரியாக வழங்கப்படுவதில்லை என புகார் தெரிவித்தனர்.

மேலும், 10 ஆயிரம் பேர் பணியாற்ற வேண்டிய மாநகராட்சியில் 1000- க்கும் குறைவானவர்களே துப்புரவு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதால் பணிச்சுமை அதிகமாகிறது. இதனால் கூடுதல் நேரம் பணி புரியும் சூழல் உருவாகிறது. ஆனாலும், இதுவரை எவ்வித ஊதிய உயர்வையும் மாநகராட்சி அமல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினர்.