திருப்பூர் : குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் திருப்பூர் மாநகாட்சியின் நடவடிக்கையை கைவிடக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் : குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் திருப்பூர் மாநகாட்சியின் நடவடிக்கையை கைவிடக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் கல்லூரி சாலை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், 25 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகமானது இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்குவதாகக் கூறி இடத்தை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டது.

இதனிடையே, திடக்கழிவு மேலாண்மை என்ற பெயரில் குடியிருப்பு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் நிலை ஏற்பட்ட கூடும் எனக் கூறி மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே, பெரியவர்கள் முதல் சிறுவர்கள் என பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு நோய் பரப்பும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

எனவே, இப்பகுதியில் குப்பைகளை கொட்டி எந்தத் திட்டத்தையும் செய்யக் கூடாது, அதையும் மீறி திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், மாநகராட்சி அலுவலகம் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
திருப்பூர் கல்லூரி சாலை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், 25 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகமானது இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்குவதாகக் கூறி இடத்தை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டது.

இதனிடையே, திடக்கழிவு மேலாண்மை என்ற பெயரில் குடியிருப்பு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் நிலை ஏற்பட்ட கூடும் எனக் கூறி மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே, பெரியவர்கள் முதல் சிறுவர்கள் என பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு நோய் பரப்பும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

எனவே, இப்பகுதியில் குப்பைகளை கொட்டி எந்தத் திட்டத்தையும் செய்யக் கூடாது, அதையும் மீறி திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், மாநகராட்சி அலுவலகம் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.