திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலின் உபகோவிலில் கோபுரகலசம் மர்மநபர்களால் இன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலின் உபகோவிலில் கோபுரகலசம் மர்மநபர்களால் இன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான அருள்மிகு அழகுநாச்சியம்மன் கோவிலின் கலசம் திருடப்பட்ட இதேநாளில் தான், கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று வருடாபிசேகம் நடைபெற இருந்த அழகுநாச்சியம்மன் கோவிலில் கோபுரக்கலசம் திருடப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், பழனி டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். தொடர்ந்து, கோபுரக் கலசத்தை திருடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பழனி கிரிவீதியில் கோவில் சார்பில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பெரும்பாலானவை இயங்காமலும், பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் உள்ளன. குற்றச்சம்பவங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் காவல்துறையினரிடம் காண்பித்தால் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும்.

ஆனால், கோவில் நிர்வாகம் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதாகவும், கோவில் வருமானத்தை உயர்த்துவதில் மட்டுமே நோக்கம் கொண்டுள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து அமைப்பினர், பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், நிர்வாக அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான அருள்மிகு அழகுநாச்சியம்மன் கோவிலின் கலசம் திருடப்பட்ட இதேநாளில் தான், கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று வருடாபிசேகம் நடைபெற இருந்த அழகுநாச்சியம்மன் கோவிலில் கோபுரக்கலசம் திருடப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், பழனி டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். தொடர்ந்து, கோபுரக் கலசத்தை திருடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பழனி கிரிவீதியில் கோவில் சார்பில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பெரும்பாலானவை இயங்காமலும், பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் உள்ளன. குற்றச்சம்பவங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் காவல்துறையினரிடம் காண்பித்தால் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும்.

ஆனால், கோவில் நிர்வாகம் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதாகவும், கோவில் வருமானத்தை உயர்த்துவதில் மட்டுமே நோக்கம் கொண்டுள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து அமைப்பினர், பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், நிர்வாக அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.