நீதிபதியுடன் அரசு வக்கீல் தகராறு விவகாரம் : சிறப்பு அரசு வக்கீல் நியமிக்க கால அவகாசம்

கோவை : நீதிபதியுடன் மத்திய அரசு வக்கீல் தகராறில் ஈடுபட்ட விவகாரத்தில் புதிய சிறப்பு அரசு வக்கீலை நியமிக்க அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை : நீதிபதியுடன் மத்திய அரசு வக்கீல் தகராறில் ஈடுபட்ட விவகாரத்தில் புதிய சிறப்பு அரசு வக்கீலை நியமிக்க அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கோவை நீதிமன்ற வளாகத்தில் இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதி மன்றத்தில் போதை பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இதில் பொறுப்பு நீதிபதியாக சஞ்சய் பாபா உள்ளார். 

இந்நிலையில், வழக்கு விசாரணை நடைபெறும் போது மத்திய அரசின் சிறப்பு வக்கீல் ரேணுகா தேவி தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையெடுத்து, அரசு வக்கீல் இல்லாமல் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரேணுகா நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதனைத் தொடர்ந்து வக்கீல் ரேணுகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர் ஆஜராகி மன்னிப்பு கேட்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் நீதிபதி அவருக்கு ரூ.200 அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

மேலும், இவ்வழக்கு குறித்து மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குநர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இது குறித்த சம்மன் இயக்குநருக்கு கிடைக்க பெறாததால் நேற்று இயக்குநர் நேரில் ஆஜராகவில்லை. 

மேலும், மத்திய அரசு சார்பில் சிறப்பு வக்கீலை நியமிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...