நீலகிரி : உதகை மார்க்கெட் சந்தை வளாகத்தில் இயங்கி வரும் நியாய விலை கடையில் ஆர்.டி.ஓ. சுரேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி : உதகை மார்க்கெட் சந்தை வளாகத்தில் இயங்கி வரும் நியாய விலை கடையில் ஆர்.டி.ஓ. சுரேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு குறித்து ஆர்.டி.ஒ., அதிகாரி சுரேஷ் கூறுகையில், "மடித்தொரையில் உள்ள சத்துணவு மையத்தில் ஆய்வு செய்த போது உணவு தரமாக இல்லை. அமைப்பாளர் அங்கு இல்லை. பதிவேடுகளும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து, அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உதகை மார்க்கெட் வளாகத்தில் உள்ள நியாயவிலை கடையில் நடத்தப்பட்ட ஆய்வில் அனைத்தும் முறையாக உள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தேவையானப் பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்க இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும்," என்றார்
