திருப்பூர் : போக்குவரத்து பணிமனையில் கடந்த சில மாதங்களாக விடுப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டிவரும் அதிகாரிகளைக் கண்டித்து அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் பணிமனை முன் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர் : போக்குவரத்து பணிமனையில் கடந்த சில மாதங்களாக விடுப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டிவரும் அதிகாரிகளைக் கண்டித்து அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் பணிமனை முன் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடத்துநராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ் குமார் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருப்பூர் 2-வது போக்குவரத்து பணிமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், தொடர்ந்து அவர் விடுமுறை கேட்கும் போதெல்லாம் போக்குவரத்து பணிமனை டி.சி மற்றும் பி.எம் ஆகியோர் விடுப்பு வழங்காமல் இருந்துள்ளனர்.

விடுமுறை நாட்களில் கூட ரமேஷை பணி செய்ய வற்புறுத்துவதாகவும் தனக்கு வேண்டியவர்களுக்கும், சாதகமானவர்களுக்கும் மட்டுமே அவர்கள் விடுமுறை அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தொழிலாளர்களிடம் பாரபட்சம் காட்டி வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோரி நடத்துநர் ரமேஷ்குமார் திருப்பூர் 2-வது போக்குவரத்து பணிமனை முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடத்துநராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ் குமார் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருப்பூர் 2-வது போக்குவரத்து பணிமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், தொடர்ந்து அவர் விடுமுறை கேட்கும் போதெல்லாம் போக்குவரத்து பணிமனை டி.சி மற்றும் பி.எம் ஆகியோர் விடுப்பு வழங்காமல் இருந்துள்ளனர்.

விடுமுறை நாட்களில் கூட ரமேஷை பணி செய்ய வற்புறுத்துவதாகவும் தனக்கு வேண்டியவர்களுக்கும், சாதகமானவர்களுக்கும் மட்டுமே அவர்கள் விடுமுறை அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தொழிலாளர்களிடம் பாரபட்சம் காட்டி வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோரி நடத்துநர் ரமேஷ்குமார் திருப்பூர் 2-வது போக்குவரத்து பணிமனை முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
